வலைப்பதிவில் தேட...

Saturday, June 4, 2011

சங்கப்பாடல் ஒன்று

தமிழில்
முதற் சங்க காலம்
இடைச்சங்க காலம்
கடைச்சங்க காலம்
இன்றோ
தொழிற்சங்ககாலம்
எங்கு  நோக்கினும்
ஆர்ப்பாட்டங்களும்
ஊர்வலங்களும்
போராட்டங்களுமாக

என்று கவிஞ்ர் கந்தர்வன் குறிப்பிடுவார்.

எனக்கும் ஒரு முப்பதாண்டு தொழிற்சங்க அனுபவங்கள் உண்டு
அப்படியான தொழிற்சங்கக்கவிதை ஒன்று
அது 1904 ஆம் ஆண்டில் "மெட்டல் ஒர்க்கர்"என்ற தொழிற்சங்கக்ப்பத்திரிகையில் வெளி வந்தது
இருபதாண்டுக்கு முன்பு வெளி வந்த எம். கே. பாந்தே அவர்கள் எழுதிய"இந்திய நாடு விற்பனைக்கல்ல" என்ற இரண்டு ரூபாய் சி ஐ டி யு வின் கடைசிப்பக்கத்துக்கவிதை அது
இன்றைக்கும் அது பொருத்தமாக இருக்கிறது:



வீழ்வோமாயினும் வெல்வோம்

நூறாயிரம் தடவைகல் தடுமாறி இருக்கிறது
தலைகுப்புற விழுந்திருக்கிறது சிராய்த்துக்கொண்டிருக்கிறது
மீண்டும் எழுந்திருக்கிறது தொழிலாளர் இயக்கம்

கழுத்து நெரிக்கப்பட்டிருக்கிறது
மூச்சுத்திணறி உணர்விழந்திருக்கிறது
நீதி மன்றங்களால் தண்டிக்கப்பட்டு

தாக்கப்பட்டிருக்கிறது அடியாட்களால்
தடியடி பட்டிருக்கிறது காவல் துறையால்
சுடப்பட்டிருக்கிறது ராணுவத்தால்

அவதூறு பொழியப்பட்டிருக்கிறது பொதுமக்களால்
மிரட்டப்பட்டிருக்கிறது மதகுருக்களால்
திசை திருப்பப்பட்டிருக்கிறது அரசியல்வாதிகளால்


நிராகரிக்கப்பட்டிருக்கிறது ஓடுகாலிகளால்
உதிரம் உறிஞ்சப்பட்டிருக்கிறது புல்லுருவிகளால்
ஊடுருவப்பட்டிருக்கிறது உளவாளிகளால்

காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது துரோகிகளால்
பாரம்பரியம் இழந்திருக்கிறது பச்சோந்திகளால்
விலை பேசப்பட்டிருக்கிறது தலைவர்களால்
கை விடப்பட்டிருக்கிறது கோழைகளால்

இத்தனையும் மீறி இவ்வளவும் தாண்டி
இந்தப்புவிக்கோளம் இது நாள் வரை அறிந்தவற்றுள் எல்லாம்
ஜீவனும் திறனுமுள்ள சக்தியாய் காலங்களின் அடிமைத்தளையிலிருந்து
பாட்டாளி வர்க்கத்தை விடுவிடுவிப்பதுதான- தனது
சரித்திர கடமையை நிறைவேற்றும்

அடைந்தே தீரும் இறுதி லட்சியத்தை!
சூரியன் அஸ்தமிக்கும் என்பது போல்
நிச்சயமாய்.


No comments: