வலைப்பதிவில் தேட...

Tuesday, February 8, 2011

பிள்ளைகளா வந்து பொறந்திருக்கு ஒண்ணொண்ணும் ஒவ்வொரு ஆயிரம்.

முந்திராவில் ஜவகர் 




நகர்வாலாவில் இந்திரா




சர்க்காரியா கமிஷன் முன்  கருணாநிதி



உர ஊழலில் நரசிம்மா




போஃபோர்ஸ் ஊழலில் ராஜீவ் 




ஆதர்ஷ் ஊழலில் ஒரு விலாஸ்




நில ஒதுக்கீட்டில்/மினரல் கொள்ளைக்கு
ஆதரவாக ஒரு எடியூரப்பா 




காமன் வெல்த் விளையாட்டில் ஒரு சுரேஷ்




கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சசி 




2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் ஒரு ராசா




மருத்துவ கல்லூரிகளுக்கான ஒதுகீட்டில் ஒரு கேதன் 




அனைத்தையும் மிஞ்சும் வகையில் இன்றைக்கு 




எஸ் பாண்ட் புகழை பரவச்செய்ய ஒரு எம் கே சந்திர சேகர்


இ ந்தப்பட்டியல் முழுமையானதல்ல...
தெரிந்த இந்தப்பெயர்களில் எல்லாம் "சர் நேம்" எனப்படுகிற சாதிப்பெயர் குறிப்பிடவில்லை. 

நேரு,காந்தி,ராவ், தேஷ்முக், கல்மாதி, தரூர், தேசாய் இவையெல்லாம் சாதிப்பெயர்தான்... 


சாதிப்பெயரைக்குறிப்பிடுவது  நமது ஆதி சொந்தங்களுக்கு இந்த மண்ணின் மைந்தர்களுக்கு செய்யும்  முழு துரோகம்









சிறு வயதுகளில் சேட்டை செய்யாத குழந்தைகள் இருக்க முடியாது; 

பொறுமை இழந்த நேரங்களில் அந்தக்குழந்தைகளைக்கண்டிக்கும்போது செல்லமாக அம்மா சில நேரங்களில் இப்படிக்குறிப்பிடுவார்.


"பிள்ளைகளா வந்து பொறந்திருக்கு;
ஒண்ணொண்ணும் ஒவ்வொரு ஆயிரம்".


அன்றைக்கு ஆயிரங்களே பார்க்காத ஏழைக்குடும்பங்கள் அப்படி அலமாந்து சொல்லி மாய்ந்திருந்தார்கள்.


இன்றைக்கும் அப்படிப்பட்ட ஏராளமான குடும்பங்கள் பட்டினி,
பசியில் வீடில்லாமல் வாசலில்லாமல் குடிக்க்த்தண்ணி இல்லாமல்
இந்த தேசமெங்கும்  பரிதவித்திருக்க

கோடி கோடியாய்க்குவித்து வைத்து 
கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைத்தட்டிக்கேட்க அம்மாக்கள்தான் இல்லை;

சந்தர்ப்பவசமாக அம்மாமார்கள் உயிரோடு இருந்தாலும்
கேட்கும் நிலையில் இவர்கள் இல்லை போலிருக்கிறது.


காலுக்குச்செருப்புமில்லை
கால் வயிற்றுக்கூழுக்கும்  நாதியில்லை
பாழுக்குழைத்தோமடா என் தோழனே
பசையற்றுப்போனோமடா
                                                           - ஜீவா


வாழ்க  பாரத மணித்திரு நாடு.
                                                           - பாரதி









Thursday, February 3, 2011

ராஜா என்றொரு மந்திரி

'மண் பொய் சொல்லுவதில்லை
மிதிக்கிறோம்
மரங்கள் பொய் சொல்லுவதில்லை
வெட்டுகிறோம்'
மந்திரிகள் பொய் சொல்லுகிறார்கள்
மாலையிடுகிறோம்'
                                                -கவிஞர் கந்தர்வன்

 நமது  சம காலத்தில் வாழ்ந்த அவர் இப்போது  நம்மோடு இல்லை.

அவரது வைர வரிகளை வாழ வைத்துக்கொண்டு இன்றைய மந்திரிகளும் ராஜாக்களும் வலம் வருகிறார்கள்.


2 ஜி என்றைக்கு வந்ததோ அன்று முதல்
பொறுப்பில் இருந்த ராஜா முதற்கொண்டு மந்திரிகள் வரை
ஓரே  பொய்மயம்தான்

பிரதமருக்கு எல்லாமே தெரிந்துதான் நடந்தது - ராசா

அலைவரிசை ஒதுக்கீட்டில் ஏல முறையைப்பின்பற்றவும்-பிரதமர்

ஊழலே நடக்கவில்லை- கருணா நிதி

ராசா மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை- கருணா நிதி

ஜே பி சி வேண்டும்- எதிர்க்கட்சிகள்

முடியாது-பிரணாப்

பொதுக்கணக்குக்குழு முன் ஆஜராகி எனது தரப்பின் வாதங்களை சொல்லத்தயார்- பிரதமர்

அவர் சொன்னபடி ஆஜராகமாட்டார்- மீண்டும் பிரணாப்

பாராளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதற்காக ராசா ராஜினாமா செய்தார்

சி ஏ ஜி அறிக்கையில் கண்டபடி ஏதும் நடைபெற வில்லை - புதிய மந்திரி கபில் சிபல் (அப்படியானால் ராசாவையே மந்திரியாக நீடிக்கச்செய்திருக்கலாமே!)

அரசுக்கு வர வேண்டிய பைசாவில் ஒரு பகுதிகூட இழப்பில்லை- திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக் சிங்

முன்னாட்களில் ராஜாக்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் இன்னொரு ராஜாவால்.

அது நாடு பிடிக்கும் போட்டியால் நடந்திருக்கும்.

தோற்ற ராஜாவை ஜெயிலில் வைத்து ஜெயித்த ராஜா இம்சைப்படுத்துவது எல்லாம் சகஜமாக இருக்கும்.

வரலாற்றின் பக்கங்களில் இது போன்ற அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.  நமது ராஜா அப்படிப்பட்டவர் அல்ல;

மந்திரியாக இருந்தவர் (உண்மையில் மந்திரிகள் என்றால் அது சித்தார்த் பெருவாவும்  சந்தோலியாவும்தான்)இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் அவரது ஆலோசகர்களோடு

'நீரா' க்களைக்கைது செய்யாத 'நீரோ'க்களாக அரசும் நாமும்

காலவெளி காத்துக்கிடக்கிறது உண்மைகளைப்பதிவு செய்ய...


Wednesday, February 2, 2011

நாங்க மனுஷங்கடா

1984 ஏப்ரல் மே மாதங்களில் முனைவர் கே .ஏ குணசேகரனின் நாட்டுப்புற இசைக்குழு மக்களுக்கான பாடல்களை இசைத்து தமிழ் நாட்டையே சுற்றி வந்து கொண்டிருந்தது.

காரைக்குடியில் குதிரைவண்டி ஸ்டாண்டில் ஒரு நிகழ்ச்சிக்கு  நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். கோட்டைச்சாமி, காந்தி அன்னாவி,கங்கை பாலன் மாரியம்மாள் நாதஸ்வர செட் என்று நையாண்டி  மேளத்தில் ரொங்க வைத்து விடுவார்கள்.

நிகழ்ச்சி முடியும் போது கவிஞர் இங்குலாபின் "மனுஷங்கடா" என்ற பாடலைப்பாடி ஒரு எழுச்சியைப்பரவச்செய்து விட்டு அடுத்த ஊருக்கு பயணப்படுவார்கள்.



மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா
ஒன்னைப்போல அவனைப்போல
எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுஷங்கடா
                                                                       - டேய் மனுஷங்கடா

ஒங்கதலைவர் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
ஒங்க ஊர்வலத்துல தரும அடிய வாங்கிக்கட்டவும்
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும்
நாங்க இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்
                                                                      - டேய் மனுஷங்கடா

எங்களோட மானம் என்ன தெருவுல கெடக்கா
ஒங்க இழுப்புக்கெல்லாம் பணியறதே எங்களின் கணக்கா
ஒங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க வீடு புகுந்தா ஒங்க மானம் கிழிஞ்சி போகாதா
                                                                    - டேய் மனுஷங்கடா

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது
ஒங்க சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க
நாங்க எரியும் போது எவன் மசுர புடுங்கப்போனீங்க
                                                                     - டேய் மனுஷங்கடா