வலைப்பதிவில் தேட...

Wednesday, April 14, 2010

மதமே மனிதனைப்பிடிக்காதிரு

ஏப்ரல் ௨00௨ இல் எழுதிய கவிதை இது

காந்தியின் தேசம்
பூராவும்
கருகல் வாசம்

ஆண்கள் பெண்கள் குழந்தைகள்
என உயிர் உள்ளவர்களும்
வீடுகள் கடைகள் வாகனங்கள்
என உயிரற்றவைகளும்
'ஒரு பிரிவினருக்கு' உடமை என்பதால்
கொளுத்தப்பட்டன

'சிக்கி முக்கி' யில் தீயின்
கொழுந்தினைக்கண்டவன்
பார்க்கவில்லை
இந்தக்கொடுமைகளை ;
ஒருவேளை பார்த்திருந்தால்
தீயை ஏன்டா கண்டுபிடித்தோம்
என்று தற்கொலை செய்து
கொண்டிருப்பான் போலும்;

பிணக்குவியலின் ஊடாக
அழும் குழந்தையின்
குரலில் கேட்கிறதா?
'மதம்' என்றால் என்ன?
'நீங்கள் இட்ட பெயர் கூட
தெரியாதே எனக்கு '

மதம் பிடித்தவர்களே
மனிதர்ளை

கொல்லாதீர்கள்|
அவர்களுக்காகத்தானே
மதங்கள் ;

உங்கள் மதங்கள் வாழ
முதலில்
மனிதர்களை
நிம்மதியாக
வாழ விடுங்கள்...

No comments: