வலைப்பதிவில் தேட...

Friday, April 30, 2010

உழைப்பவர் தினம்

உலகத்தொழிலாளருக்கெல்லாம் 
எட்டு மணி நேர வேலை
எட்டு மணி நேர கலாசார வாழ்க்கை
எட்டு மணி நேர உறக்கம்

அன்று
சிகாகோ வீதிகளில் சிந்திய இரத்தம் 
இன்று ஏ சி அறைகளுக்குள்
அடைபட்டுக்கிடக்கும் 
ஐ டி இளைஞர்களுக்கும
சேர்த்துதான்

மீண்டும்
அதே கோரிக்கையை
அவர்களின் தியாகங்கள்
பேரால் உறுதி ஏற்க
வேண்டிய தருணம்
எனப்படுகிறது  

Thursday, April 29, 2010

மீனாட்சி கல்யாணம்





மதுரையில் ஆண்டு தோறும்  சித்திரை மாத பவுர்ணமி அன்று  கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிக்கொண்டே இருக்கிறார்.. அதற்கு முதல் நாள்  அழகருக்கு பக்தர்களின் சார்பில் எதிர்சேவை. அதற்கு முந்திய  நாள் தேரோட்டம் அதற்கு ஒரு நாள் முன்பாக மீனாக்ஷி கல்யாணம். வருடா வருடம் தவறாமல் திருமணத்தை நடத்தி வைத்து அழகு பார்க்கிறார்கள். ஆனால்  கள்ளழகர் மட்டும் திருமணத்தை தவறவிட்டு வைகை வடகரை வழியாக துலுக்க நாச்சியாரை சந்திக்கவும் மண்டூக முனிவருக்கு  சாபம் கொடுக்கவும் இரவில் தசாவதாரம் என்று போக்கொண்டு இருக்கிறார். நிஜத்தில்  பல அழகிய பெண்கள் வயதாகியும் கூட திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். ஒரு பாடல் பாரதி கிருஷ்ணகுமார் கரகரத்த குரலில் பாடக்கேட்டு இருக்கிறேன்.

'மதுரை மீனாட்சிக்கும் காஞ்சி காமாட்சிக்கும் 
மாசமொரு கல்யாணமாம் 
தேர் மேல மாப்பிள்ளை ஊர்  கோலமாம்
எங்க எதித்த வீடு பொண்ணு வயசாகி நாளாச்சி 
எப்பதான் கல்யாமம் -அவ 
கண்ணில் எப்பவும் நீர்க் கோலமாம்'

அழகரை சேவித்துவிட்டு பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என்று சொல்லி விட்டு சூடம் கலந்த  வாசத்துடன் சக்கரை தருவார்களே அதை வாங்கித்தின்ற  நாட்கள்; வெயில் என்றும் பாராமல்  ராமராயர் மண்டகப்படி பக்கம் நெற்றியில்  கரைந்த குங்குமத்தோடு நாமத்துடன் அலைந்த நாட்கள் அலைமோதுகின்றன.
அப்பா எனக்கு முதல் மொட்டை அழகர் ஆற்றில் இறங்கிய அன்று போட்டதாகசொல்லுவார்.
பச்சை பட்டு அணிந்து  ஆற்றில் இறங்கினால் அனைத்து வெள்ளாமையும் சிறக்கும் என்பார்கள்
சிகப்பு பட்டு  என்றால் மிளகாய் வத்தல் விளைச்சல் பொங்கி வருமாம்
வெள்ளை பட்டு உடுத்தி வந்தால் பருத்தி விளைச்சல் அமோகமாக இருக்குமென்றும் சொல்லுவார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் 
பி டி பருத்தி விவசாயம் செய்த விவசாயிகள் சுமார் இரண்டு லக்ஷம் பேர் தற்கொலை செய்து மடிந்து இருக்கிறார்கள...
ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கூலியில் காலத்தை வென்று கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை  நமது ஜனத்தொகையில் 70  சதமானம் என்று ஒரு கணக்கு நம் முன் காட்டப்படுகிறது..
ரூபாய்  50 ,000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் 54 பேர என்று சொல்லப்படுகிறது...
வருடா வருடம் மீனாக்ஷி திருக்கல்யாணம் நடந்து கொண்டேதான் இருக்கிறது
வருடாவருடம் அழகர் வந்து கொண்டிருக்கிறார்...

Monday, April 26, 2010

அருந்ததியர்


                                                                             














அன்று ...
தாய் மண்ணின் சுதந்திரம்
வேண்டி
வெள்ளையனை அவனது
கூடாரத்தில் "ஒண்டி"யாகவே
சந்தித்து
மடிந்து போனான்
மா "வீரன்" ஒருவன்

அவனுக்கான இடம்
சுதந்திர வரலாற்றில்
தேடிக்கொண்டிருக்கிறோம்
தட்டுப்படவில்லை;

பிறகு...
மா "மதுரை "யில்
கள்ளர்களிடமிருந்து
உங்கள் வாழ்வைக்
காத்திருக்கிறான்
மற்றொரு மகத்தானவன்
அவன் ..." வீரன்"

மாறுகால் மாறுகை வாங்கி
"மீனாட்சி" க்கு காவலாய்
"கீழ் " வாசலில் காவல் தெய்வமென
பெயரிட்டு
வெளியே நிற்க வைத்தீர்கள்;

அடுத்து...
ஊமைத்துரையின்
வலதும் இடதுமாக செயல்பட்ட
கந்தன் பகடை பொட்டிபகடை

அந்தோ பரிதாபம்
அவர்களும் கூட
உங்கள் வரலாற்றின்
பக்கங்களில் இருந்து
விரட்டப்பட்டிருக்கிறார்கள்
என்பதை அறிந்தோம்;

நெல்லை சீமையில்
சனாதனி யாகப்பிறந்த
"முத்துப்பட்டன்"
"பொம்மக்கா" " திம்மக்கா" வை
மணம்முடித்தான்...

பிராமணன் ஒருவன்
"அருந்ததி "யாவதோ
என்று அவனையும்
படு கொலை செய்தீர்கள்;


'சிக்கி முக்கி' கற்களில்
அக்னியைகட்டுபடுத்தும்
சூட்சுமம் அறிந்தவனே |
சமுதாயக்கோட்படுகளால்
சாதியின் சூழ்ச்சியால்
'சக்கிலியன்' ஆனதென்ன;

குதிரைப்படைக்கு
தோல் பட்டைகள்
செய்து தேர்ந்தவனே|
படை வீரனாய்
வலம் வந்தவனே|
இன்று சனாதனக் குதிரை
தள்ளி விட்ட
இழிசனராய்
சவக்குழி தோண்டுவதென்ன|

மா அதியனாய்
நீ பாராண்ட திறத்திற்கு
சாட்சியாய்
அவ்வையே நட்பு பாராட்டி
நெல்லிக்கனி கொடுத்ததென்ன|


இன்று
மாதியனாய்
மலக்குழியில்
வீழ்ந்து கிடப்பதுவும் என்ன|

இழப்பதற்கு எதுவுமில்லை;
அடிமைத்தனத்தைத் தவிர
ஒழிப்பதற்கு சாதி
இருக்கிறது;
எழுந்து வா
கரம் கோர்த்து |

மாடறுத்து, செருப்புதைக்க,
பறையடித்து, எழவு சொல்ல ,
பிணந்தூக்கி, மலமள்ள...
என ஒரு
ஏவல் சாதி இல்லை என்பதை
ஊருக்கு உரைப்போம்
விரைந்து வா |


உங்களின்
கொலைகள்
மதுரை வீரனில் தொடங்கி
நக்கலமுத்தையன்பட்டி
ஜக்கையன் வரை
நீட்சி பெற்றுக்கொண்டு
இருக்கிறது...
நிறுத்துங்கள் நீசத்தனத்தை|


மனுவின் பெயரால்
நீங்கள்
ஆண்டது போதும்|
நாங்கள் மாண்டது
போதும்|


இனி பொறுப்பதில்லை
என
போர்ப்பரணி பாடி வா|
அக்னிக்குஞ்சாக வா
அமைப்பாக உருவெடுத்து ...

அப்போது
சாதிச்சிமிழ்கள் உடையும்
சம நீதிப்பயிர்கள்
துளிர் விடும்...

Saturday, April 24, 2010

கோத்ரா கலவரம்

நேற்றுதான் ...
நில மகளின் களேபரம்
அடுக்குமாடிகளின்
குடிசை வீடுகளின்
இடிபாட்டில் எம் மக்கள்
தீப்பெட்டிக்குள் மூச்சிழந்த
பொன் வண்டுகளென ...

தப்பியவர்களின் கூடாரங்களில்
அணைக்கமுடியாத
தீண்டாமைத்தீ ...
தனது நாக்கைத்துழாவியது

இயற்கையின் கலவரத்தில்
செயற்கையாய் சாதியின்
தாண்டவம் ....

இன்று ...
மீண்டவர்கள்
கையூன்றி எழும் நேரம்
கலவர்த்தீயில் காந்தி தேசம்
ஆண் பெண் குழந்தைகள்
அனைவரும்
மத வெறியால் மாய்க்கப்பட்டனர்...

வாதத்துக்கு மருந்து உண்டு
மத வாதத்துக்கு என்ன உண்டு?
ஒரு உறைக்குள் ஒரு கத்திதான்
இருக்க முடியும் ...

உனக்குள்ளும் அப்படித்தான்
மதவாளை உடைத்தெறி ...
மனிதக்கேடயம்
கையிலேந்து ...

கோத்ரா வில் பணியாற்றிய போது (மார்ச் ௨00௨ இல் எழுதிய கவிதை இது)

Thursday, April 22, 2010

மகத்தான வேலை நிறுத்தம்






உலகின் தொலைதொடர்புநிறுவனங்களில் ஏழாவது இடத்திலும்
இந்திய நாட்டின் முதன்மையான
நிறுவனமாகவும் இருப்பது
பி எஸ் என் எல்.
அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஒரு ஆகப்பெரிய நிறுவனம்பி எஸ் என் எல் .
சுமார் மூன்று லகஷம் கிலோமீட்டர் கண்ணாடிஇழை கேபிள்களை நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக பதித்து சேவை புரிந்து வருகிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக் அளவில் தொலைதொடர்பு இருப்பது இந்தியாவில்தான்.(மொத்த இணைப்புகள் வயருடன்உள்ள டெலிபோன் மற்றும் மூன்று வயர் ஐம்பத்தாறு கோடியே இருபத்தியிரண்டு லக்ஷத்து பத்தாயிரம் - டெலி டென்சிட்டி இந்தியா: நாற்பத்திஎட்டு சதம் .இந்திய நாட்டின் ரயில்வே தண்டவாளத்தின் மொத்த நீளமே அறுபதினாயிரம் கிலோமீட்டர்தான்)
சாம் பிட்ரோடா என்ற தொலைதொடர்பு நிபுணரின்(?) தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை இப்படிசொல்லிச்செல்லுகிறது :

இருக்கின்ற
மூன்று லக்ஷம் ஊழியர்களில் ஒரு லக்ஷம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது;

பி எஸ் என் எல் பங்குகளில் முப்பது சதமான பங்குகளை விற்று விடுவது; (அரசின் பெயரிலேயே அனைத்து பங்குகளும் இருப்பதால் பி எஸ் என் எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்று ஒரு பைசாகூட வராது)

காப்பர் கேபிள்களை தானியாருக்கு தாரை வார்ப்பது ;

ஏழு பெரிய நகரங்களில் நிறுவனத்தின் வசம் இருக்ககூடிய இருபத்திமூன்று லக்ஷம் சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலங்களை விற்பது ;(இருக்கின்ற சொத்துக்கள் ஒன்று கூட அரசின் பெயரிலிருந்து இன்று வரை மாற்றப்படவில்லை) விற்கிற காசெல்லாம் அரசுக்குத்தான் செல்லும்.

நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பிரதமரின் ஆணைப்படி அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை எப்படி இருக்கிறது?
இத்தோடு
தொண்ணூற்றி மூன்று மில்லியன் ஜி எஸ் எம் கருவிகளுக்காக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்வது;

உயர்மட்டத்தில் இருக்ககூடிய ஆயிரத்து ஐந்நூறு ஐ டி எஸ் அதிகாரிகளை பத்தாண்டு காலமாக நிறுவனத்திற்குள் கொண்டு வராமல் இருக்கும் அரசின் மெத்தன போக்கு;

நிறுவனத்தின் பணிகளை அவுட் சோர்சிங் மூலம் செய்வது;

எல்லா பிரச்னைகளும் ஊழியர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
விளைவாக,
ஜே எ சி என்கிற ஒரு அமைப்பு அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்களை உள்ளடக்கி உருவானது.
அந்த அமைப்பின் கூட்டு முடிவு மற்றும் வழி காட்டுதலின் அடிப்படையில் ஐ டி எஸ் அதிகாரிகள் தவிர்த்து அனைத்து அதிகாரிகள் அமைப்புகளும் அனைத்து ஊழியர் சாங்கங்களும் காலவரையற்ற ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அறைகூவல் விடப்பட்டது

வரலாற்றில் முதல் முறையாக வங்கி ஊழியர்களைப்போல் எல் ஐ சி ஊழியர்களைப்போல் அதிகாரி தொழிலாளி பேதம் இன்றி மாபெரும் வேலை நிறுத்தப்போர் நடைபெற்றது. ஏப்ரல் எருபதம்தேதி காலை ஆறு மணிக்கு துவங்கியது வேலை நிறுத்தம். நாடு முழுவதும் பல அலுவலகங்கள் பூட்டப்பட்டன. கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பதினோரு மணிக்கு மத்திய மந்திரி ராஜா அவர்களின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு. ஜே எ சி தலைவர்களுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. மாலை மூன்றரை மணிக்கெல்லாம் போராட்டம் முடித்துகொள்ளப்பட்டது.
இது ஒரு துவக்கம் தான்
இனிமேல் ஊழியர்களைப்பாதிக்ககூடிய எந்த ஒரு பிரச்னைஎன்றாலும்
ஒன்று பட்ட போராட்டங்கள் தொடரும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.




Saturday, April 17, 2010

சாம் பிட்ரோடா குழுவின் அறிக்கை


சாம் பிட்ரோடா என்ற ஒருவரின் தலைமையில் இந்த வருட ஆரம்பத்தில் அரசு நிறுவனமான' பி எஸ் என் எல்' லின் நிதி ஆதாரம் மற்றும் அதனை லாபத்தில் இயங்க வைப்பதற்கான வழி முறைகளை ஆராய பிரதம மந்திரியின் ஆலோசனையின் பேரில் ஒரு குழு (கமிஷன் அல்லது கமிட்டி என்றும் கொள்ளலாம்) ஜனவரி ஆறாம் தேதி அமைக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் செயல்பட்டு பிப்ரவரி ஒன்பதாம் தேதி அதனுடைய பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பித்தது.

நேரு காலத்தில் இருந்து சுதந்திர இந்தியாவில் ஏகப்பட்ட கமிட்டிகள், கமிஷன்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. எந்தக்குழுவும் இவ்வளவு விரைவாக அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

யோத்தியில் பாபர் மசூதி தொண்ணூற்றி இரண்டாம் வருடம் டிசம்பர் ஆறாம் தேதி இடிக்கக்ப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அதனை விசாரிப்பதற்காக லிபரான் கமிஷன் பத்து நாட்கள் கழித்து டிசம்பர் பதினாறாம் தேதி அமைக்கப்பட்டது. மூன்று மாத காலத்திற்குள் அதன் அறிக்கையை சமர்ப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.

ஆனால் நாற்பத்தெட்டு முறை மட்டுமே நீட்டிப்பு கொடுக்கப்பட்டது.

அறிக்கை சமர்ப்பிக்க பதினேழு ஆண்டுகள் மட்டும் எடுத்துக்கொண்டது.

குழுவிற்கு ஆன செலவு வெறும் எட்டு கோடிதான்.

றிக்கையின் முடிவின் அடிப்படையில் பரிந்துரைகள் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு மூன்று அரசியல் தலைவர்களுக்கு ( அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யான் சிங், உமா பாரதி உள்ளிட்ட விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சிலருக்கு..) பொது அமைதியைக்கெடுத்த வகையில் அதிகபட்சமாக 'ஜெயில் தண்டனை' (எவ்வளவு நாட்களுக்கு என்று தெரியாது...) விதிக்கப்படலாம். அல்லது அதை வழங்கும் முன்னதாவே அவர்கள் இயற்கை மரணம் காரணமாக மரணமடைந்தும் போகலாம் 'ஹர்ஷத் மேத்தாவைப்போல'. அது இருக்கட்டும்...

பிட்ரோடா கமிட்டியின் பரிந்துரைகளில் ஒன்று பி எஸ் என் எல் நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று லட்சம் ஊழியர்களில் ஒரு லட்சம் பேரை (அதாவது மூன்றில் ஒரு பகுதியினரை)வி ஆர் எஸ் திட்டத்தில் வீட்டுக்கு அனுப்புவது என்பது.

மூன்று நான்கு அரசியல்வாதிகளுக்கு ஜெயில் தண்டனை கொடுப்பதற்காக போடப்பட்ட லிபரான் குழு எடுத்துக்கொண்டதைப்போல் பதினேழரை ஆண்டு கால நீண்ட நெடிய அவகாசம் வேண்டாம். அதில் பாதி அதாவது ஒரு எட்டரை ஆண்டுகள் பிட்ரோடா எடுத்துக்கொண்டிருந்தாலே போதும். பிட்ரோடா அறிக்கையில் சொன்னதற்கும் மேலாக அதாவது ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ஊழியர்கள் பணி நிறைவில் தானாகவே சென்று விடுவார்கள். லிபரான் கமிஷன் எடுத்துகொண்டதைப்போல் பதினேழு ஆண்டுகள் கிட்டத்தட்ட மூன்று லக்ஷம் பேரில் இரண்டு லஷத்து பத்தாயிரம் பேர் பணி நிறைவில் வீட்டுக்கு சென்று விட்டிருப்பார்கள் |

தற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கடந்த இருபத்தாறு ஆண்டுகளுக்கு மேல் புதியதாக வேலைக்கு ஆள் எடுக்காமல் இருக்கும் ஆளெடுப்பு தடைச்சட்டம்.

ருகேள்விதான் எனக்கு தோன்றுகிறது.
லிபரான் கமிஷனில்
குற்றம் சாட்டப்பட்டவர்களின்
ஐந்தாறு பேரின் உயிர் என்ன வெல்லமா?
பி எஸ் என் எல் நிறுவனத்தில் பணி புரியும்
ஒருலஷம் ஊழியர்களின் உயிர் என்ன மயிரா?
என்னதான் கமிட்டியோ கமிஷனோ
குழுவோ விளக்கமாரோ?
பெரியாரின் பாணியில் சொன்னால்
என்ன வெங்காயமோ..........|


Wednesday, April 14, 2010

மதமே மனிதனைப்பிடிக்காதிரு

ஏப்ரல் ௨00௨ இல் எழுதிய கவிதை இது

காந்தியின் தேசம்
பூராவும்
கருகல் வாசம்

ஆண்கள் பெண்கள் குழந்தைகள்
என உயிர் உள்ளவர்களும்
வீடுகள் கடைகள் வாகனங்கள்
என உயிரற்றவைகளும்
'ஒரு பிரிவினருக்கு' உடமை என்பதால்
கொளுத்தப்பட்டன

'சிக்கி முக்கி' யில் தீயின்
கொழுந்தினைக்கண்டவன்
பார்க்கவில்லை
இந்தக்கொடுமைகளை ;
ஒருவேளை பார்த்திருந்தால்
தீயை ஏன்டா கண்டுபிடித்தோம்
என்று தற்கொலை செய்து
கொண்டிருப்பான் போலும்;

பிணக்குவியலின் ஊடாக
அழும் குழந்தையின்
குரலில் கேட்கிறதா?
'மதம்' என்றால் என்ன?
'நீங்கள் இட்ட பெயர் கூட
தெரியாதே எனக்கு '

மதம் பிடித்தவர்களே
மனிதர்ளை

கொல்லாதீர்கள்|
அவர்களுக்காகத்தானே
மதங்கள் ;

உங்கள் மதங்கள் வாழ
முதலில்
மனிதர்களை
நிம்மதியாக
வாழ விடுங்கள்...

Tuesday, April 13, 2010

ஆசீர்வாதம்


பிரேமச்சந்திரன் நாயர் என்பது அவரது பெயர்.
பிப்ரவரி இருபத்தியேழு, 2002 அன்று முதல் உலகப்பிரசித்தியடைந்த போன கோத்ராவில் நாங்கள் ஒன்றாக வேலை பார்த்தோம். 2001 மே மாதம் முதல் நாங்கள் அங்கே தங்கி இருந்தோம் ....

திருவல்லா அவரது ஊர் (நாடு) . "ப்ரேஞ்சந்திரன்" என்று தான் அவரை மலையாள அன்பர்கள் அழைப்பார்கள் . பணி மாற்றம் நிமித்தம் நான் கோத்ரா சென்ற போது அன்பாக 'வாங்க வாங்க' என்று தமிழ் பேசி வரவேற்றவர். ஒவ்வொரு முறையும் அவரது சீட்டுக்கு போகும்போதும அதே போல் வாங்க வாங்க என்பார். அடுத்ததாக 'உக்காரு' என்பார். ரசிக்கும்படியாக இருக்கும். மனசுக்கு இதமாக இருக்கும். அது கோத்ராவில் ரயில் எரித்த நேரம் . அவருக்கு எனக்கும் கலெக்டர் அலுவலகத்தில் ஸ்பெஷல் பாஸ் கொடுத்திருந்தார்கள். எனது பெயர் 'நாராயண்' (நாராயணன் என்பது தெற்கே மட்டும்தான் என்பது அப்போது தான் புரிபட்டது) என்றும் அவரது பெயர் பி சி நாயர் என்றும் கொடுத்திருந்தார்கள் அதை வைத்துக்கொண்டு காய்கறி மார்க்கெட் திறந்திருக்கும் நேரம் ரேடியோவில் கலெக்டர் ஜெயந்தி ரவி (சென்னைக்காரர்) அவர்கள் குஜராத்தியில் சொன்னதைக்கேட்டு அதன் பிறகு மார்கெட்டுக்கு நானும் அவரும் செல்வோம்....

நாய் குறுக்கே சென்றால் பாத்து பாத்து 'நாய் வரார்' என்பார். மழலைததமிழ் போல அவருடையது மலையாளத்தமிழ். வசீகரமுடையது நெருக்கமானது. சுதந்திரம் வாங்கிய அந்த மாதத்தில் (ஆகஸ்ட் 1947) பிறந்தவர். சரியாக அறுபது வயதில் அவர் பணி நிறைவு செய்தார் அப்போதெல்லாம் நானும் எனது குடும்பத்தினருடன் திருவல்லா செல்ல திட்டமிட்டிருந்தோம். முடியவில்லை...

அவரது பையன் எம் பி பி எஸ் முடித்துவிட்ட ஒரு டாக்டர் . ஏப்ரல் 9 கல்யாணம் கண்டிப்பாக வரவேண்டும் என்று போனில் பேசிவிட்டு கையேடு பத்திரிகையும் அனுப்பிவிட்டார். ஒரே ஒரு திருத்தம் மட்டும். திருமணம் திருவல்லாவில் இல்லை மாறாக திருவனந்தபுரத்தில். மணமகளும் ஒரு டாக்டர் . அவரது ஓய்வுக்கான விழாவில் கலந்து கொள்ள திருவல்லா செல்ல முடியவில்லை எனவே கண்டிப்பாக இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டி நானும் எனது மனைவியும் சென்றோம். காலை பத்து மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு . நாங்கள் ஒன்பது மணிக்கெல்லாம் மண்டபத்தில் ஆஜராகினோம். ஒருவர் கூட இல்லை.3

இடபழஞ்சி ஆர் டி ஆர் மண்டபம அது. சரியாக பத்து மணி. மாப்பிள்ளை ஒரு காரில் வந்து இறங்கினார். பெண் வீட்டார் வழக்கம் போல் ஆர்த்தி விளக்கு வைத்து வரவேற்றனர். நாயர் சாரை மட்டும காணவில்லை. விசாரித்ததில் அவர் பஸ்ஸில் வந்து கொண்டிருக்கிறார் முகூர்த்தம் பனிரெண்டு இருபதுக்குமேல் பனிரெண்டும் நாற்பது வரைக்கும் தான் ....

மணமேடைக்கு மாப்பிள்ளை ஒருபுறமும் பெண் ஒரு புறமும் சென்றனர். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பரிசுப்பொருட்கள் அவரவர் அறைக்கு சென்று கொடுத்த வண்ணம் இருந்தார்கள் நமது ஊரில் கல்யாணம் முடிந்த பிறகுதான் கொடுக்கிறார்கள். பதினோரு மனி சுமாருக்கு நாயர் சார் வந்தார் நல்லவேளையாக ...

மலையாள பெண்மனிகளோடு பாரியாளை உட்காரவைத்து விட்டு வாசல் பக்கம் அப்படியே நின்று கொண்டிருந்தேன். அப்போட்துதான் எதிர்ப்பட்டார் பிரேமச்சந்திரன் நாயர். மண்டபத்தின் உள்ளே நுழையும் போதே என்னைப்பார்த்து விட்டார்.  "என்ன எப்போ வந்தாச்சி;வீட்டிலே எங்கே விட்டிருக்கே" என்று விசாரித்தார்.

அவர்கள பாணியில் நாமும் மணமகன் அறைக்கு சென்று பரிசுப்போருளைக்கொடுத்துவிடலாம் என்று நானும் எனது மனைவியும் நினைத்திருந்தோம். அதன் படி நாயர் சாரை உடன் அழைத்துக்கொண்டு மணமகன் அறைக்கு உள்ளே நுழைந்தோம் வீடியோ காமிரா சகிதம் மணமகன் அறையே ஒளிவீசியது. ' பிரசன்னம் கொடு' என்று மகனிடம் சொல்லிவிட்டு என்னருகே நின்று கொண்டார் கூடவே எனது மனைவியும்...

ஒரு வெற்றிலை பச்சையான ஒரு கொட்டைபாக்கு இரண்டு ரூபாய் காணிக்கை வைத்து எனது கையில் அந்த டாக்டர் மாப்பிள்ளை கொடுத்ததோடல்லாமல் எனது மற்றும் எனது மனைவியின்  கால்களில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வேண்டி நின்றார். நான் சற்றும் இதை எதிர் பார்க்கவில்லை. விழித்தேன்..

கண்களில் கண்ணீர் வராத குறை எனக்கு அந்த விளக்குகள் அதையும் செய்திருக்கும் சிறிது நேரம் ஆகியிருந்தால் . உடனே சுதாரித்துக்கொண்டு கையில் கொண்டு போன சிறிய பரிசை அந்த மாப்பிள்ளை கையில் கொடுத்தேன். வீடியோ போட்டோ முடிந்து வெளியே வந்தேன் மனைவியோடு . ஒரு டாக்டருக்கு படிச்ச பையன் என் காலில் விழுந்தது என் மனதுக்கு நெருடலாக இருந்தது. மனைவியிடம் சொல்லி சொல்லி மாய்ந்து கொண்டே மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன்....

நானும் 1977 மற்றும் 1980 இரண்டு தரம் எம் பி பி எஸ் படிப்புக்காக வேண்டி மனு கொடுத்து அலைந்து திரிந்த எனது வலி என் மனைவிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை போல தெரிந்தது..

Wednesday, April 7, 2010

சீட்டு















எல் கே ஜி வகுப்பு சீட்டுக்கு
பணத்தோடு அலைந்தார் அப்பா
பஸ்ஸில் சீட்டின்றி
நின்று கொண்டே பயணித்தார் பிறகு

அரசாங்க ஒதுக்கீடு இன்ஜினியரிங்
சீட்டுக்கு இவ்வளவு
மேனஜ்மென்ட் சீட்டுக்கு இவ்வளவு
நிர்ணயித்தார் கல்வியாளர்

எம் எல் எ சீட்டுக்கு பணம் கட்டி
காத்திருந்தார் கட்சிக்காரர்
வாக்காலசீட்டோடு
ஓட்டுக்கு எவ்வளவு தருவார்கள்
என்று காத்திருந்தார் வாக்காளர்

ஒன்றரை லட்சத்துக்கு மேல்
இரயில்வே
வேலை இடத்தை நிரப்பசொல்லி
ஊர்வலம் போனார்கள் இளைஞர்கள்

'சீட்டுபிடித்து' பெரியாளானவன்
புதுக்காரில் வலம் வந்தான்

ஒழுங்காக வேலை செய்யவில்லைஎன்றால்
சீட்டைக்கிழித்து விடுவேன் என்றார் முதலாளி