வலைப்பதிவில் தேட...

Tuesday, March 30, 2010

மயான 'அமைதி'

'மயான அமைதி' என்று

சொல்லாடல்களில்

கதைகளில் சிலர்

கதைத்திருக்கிறார்கள்

மயானத்திற்கு போகாமல் தான்

எழுதி இருப்பார்கள் அவர்கள்

மயானத்திற்குப்போய் வந்தால்

அப்படி எழுதி இருக்கமாட்டார்கள்

என்று நான் யோசித்ததுண்டு

'வாய்க்கரிசி போடுங்கள்'

'காணிக்கை போடுங்கள்'

'மன்னைத்தள்ளுங்கள்'

'கடைசியா முகத்தை பார்துக்கிங்க '

'என்னடா குழி வெட்டியிருக்கீங்க'

'எங்க ஊருலேல்லாம்

இவனுங்களை வைக்க வேண்டிய இடத்தில

வச்சிருவோம்'

'ஒங்களுக்கெல்லாம் திமிரு ......'

'மொட்டை எடுக்கிறவங்க வாங்க சாமி'

'கொல்லி ஓடைக்கிரவங்க வாங்க'

'சின்னப்பயளுகல்லாம் தள்ளிக்கொங்கடா'

'ஏல போட்டபுள்ளைஹல்லாம் ஏன்டா

சுடுகாட்டுக்கு கூட்டியாரிங்க'

'கடைசி வரைக்கும் ஒன்னையப்பாக்கனுன்னு

கட்டை கெடந்து துடிச்சி போச்சப்பா '

'சொதந்திரம் கொடுக்கணும் வேட்டிய விரிங்கப்பா'

'தேர் வாடகை குழி வெட்டினது தேர் சிங்காரிச்சது

எழவு சொல்ல கூலி ....

'ஒங்களுக்கு ரொம்ப ரேட் எறிபோச்சப்ப '

'ஆனது ஆகிபோச்சி அந்த எடத்தை

கடைசிப்பயளுக்கு எல்லாம் சேர்ந்து

எழுதி குடுத்திருங்கப்பா'

கொல்லி ஓடைச்சவன் திரும்பிப்பார்க்காமல்

போய்க்கிட்டே இருப்பா

ஒரு பிணத்துக்கு மட்டும் இவ்வளவு பேச்சு

அப்புறம் எங்கே மயான அமைதி.



No comments: