வலைப்பதிவில் தேட...

Wednesday, March 3, 2010

பிணம் தூக்கிகள்


"நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைஎல்லாம் தூக்கி செல்லும்
அந்த நாலு பேருக்கு நன்றி"
என்று எம்ஜியார் வாயசைபபில்
(சங்கே முழங்கு என்ற படத்தில் )
வாழும் பொது சாதி
சனத்தோடு வாழுகிறார்கள்
போகும்போது தனியே போகிறார்கள்
அவரவர் வாழ்ந்த அடையாளத்தொடு
இடுகாடு போகிறார்கள்

பொன்னுசாமி செட்டியார் இறந்து போய்விட்டார்.
அவர் வாழ்ந்த காலங்களில் அவரது சாதியில் யாரும்
இறந்து போய்விட்டால் இவர் போய்க்கலந்து கொள்வது இல்லை
எனவே இவரைதூக்கிப்போக அவரது சாதியில் ஒரு நாலுபேர்
இல்லாமல் போனார்கள்

இறந்தவரை 'அடக்கம்' செய்யும் சாதியிலிருந்து ஒரு நாலு பேருக்கு
கூலி கொடுத்து அவரைதூக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆளுக்கு பதினைந்து ரூபாய் என்று பேசி முடிக்கப்பட்டது.

தூக்குவதில் உள்ள சிரமம் என்னவென்றால்
நாலு பேரும் ஓரே மட்டமான ஆளாக இருக்க வேண்டும்
நான் கொஞ்சம உயரமானவன்.
தோல் பாரம் இயல்பாகவே அழுத்தியது
துண்டைபோட்டுக்கொண்டேன்.
குழியை மூன்று முறை சுற்றி தேரை இறக்கி வைத்தோம்

No comments: