வலைப்பதிவில் தேட...

Tuesday, February 23, 2010

நாடு


'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே
அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டு
முடிந்ததும் இந்நாடே '
என்று பாரதி சொல்லுவார்
நமது முன்னோர்கள் வாழ்ந்து மறைந்தமைக்காக நாம் நாட்டை கொண்டாடமுடியுமா என்ன?
மனிதனை சமமாகப்பார்க்க முடியாத தேசத்தில்
சகமனிதனை மனிதனாகப்பவித்து பழக முடியாத தேசத்தில்
நாம் பாரத தேசம் என்று நிச்சயம் தோல் நிமிர்த்த முடியாதுதான்
ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற வளாகத்தில் "மனு" வின்
சிலை வைக்கப்பட்டிருக்கிறது
அவன் போதனை இந்திய மக்களின் மனங்களில் ஏற்றப்பட்டிருக்கிறது
ஆகவேதான்
'அவன் மட்டும் என் கைகளில் கிடைத்திருந்தால் அவனைக்கடித்துக்குதறியிருப்பேன் '
என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர்
பிரமிட் அமைப்பில் சாதீய வடிவத்தை நிறுவியவன் அவன்
இந்தியாவில் அவனது தடம் பதியாத மனித மனம் கிடையாது
சீக்கிய மதத்தில் குரு ரவி தாஸ் என்பவருடைய பாடல்கள்
ஏற்றுக்கொண்ட அளவுக்கு மக்கள் அவரது சாதியை ஏற்றுகொள்ள வில்லை
அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி என்பதால்
அண்மையில் ஆஸ்திரிய நாட்டு தலைநகர் வியன்னாவில்
அவரைப்பின் பற்றும் சீக்கியர்கல் தாக்கப்பட்டது மனுவினால்தான்
என்பது தெரிய வரும்.
அன்னளைப்பின் பற்றி புத்த மதத்தில் இணைந்தவர்கள் 'நியோ புத்திஷ்டு '
என்றே அறியப்படுகிறார்கள்
வால்மீகி என்பவர் ராமாயணம் எழுதியதாக சொல்லப்படும் இந்த நாட்டில்தான் அவரது பெயரை 'சர் நேம் ' ஆகக்கொண்டவர்கள் மலம் அள்ளிக்கொண்டு  இருக்கிறார்கள்.
கிறித்துவத்தில் பாதியாராக ஆவதற்குண்டான படிப்பை படித்த
ஒரு தலித் (அருள் ராஜ்) தமிழ் நாட்டில் அந்த வேலை செய்ய இடமில்லாமல் ஒரிசா சென்று மதவெறிக்கு இறையாகிப்போனார்
இவ்வளவு ஏன்
நமது நாட்டில் வாழும் இஸ்லாம் சகோதரர்கள் கூட
சாக்கடை அள்ளும் நமது சகோதரனை
ஒரு நாளும் 'மாமா' என்று அழைப்பது கிடையாது
இதுவும் கூட மனுவின் வேலைதான்



No comments: