வலைப்பதிவில் தேட...

Tuesday, February 16, 2010

தீண்டாமை

தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
என்று பள்ளிப்புத்தகங்களில்
கடைசிப்பக்கங்களில்
பெருமையாக எழுதப்பட்டிருக்கிறது
ஒவ்வொரு பதினெட்டு நிமிடத்திற்கும்
எங்களை தீண்டாமலா இருக்கிறீர்கள்?
உங்களின் வல்லுறவுக்கு இரையாக
எங்கள் சகோதரிகளின் யோனியை;
சிக்கி முக்கி கற்களால் நாங்கள் கண்ட
நெருப்பால் எங்கள் குடிசைகளை;
நீர் நிலைகளில் வாழத்துவங்கிய
எங்களை அதே நீரில் மூழ்கடித்து;
அரிவாளால் ஆயுதங்களால் எங்கள்
உடல் உறுப்புகளை;
கழிகளால் எங்கள் புட்டங்களை;
நாங்கள் செய்த செருப்புகளால்
எங்கள் மார்புகளில்;
இனிஒரு திருத்தம் செய்திடுவோம்
இளம் தளிர்களுக்கு உண்மையை
போதிக்கும் பொருட்டு
பள்ளிப்புத்தகங்களின்
கடைசிப்பக்கத்தை
அழித்துவிடுவோம்

No comments: