வலைப்பதிவில் தேட...

Thursday, April 9, 2009

அழகிய நாட்கள்

அடுத்த நிமிடம் தரவிருக்கும் ஆச்சர்யங்கள் நிறைந்த நமது வாழும் சூழல்
என்னை இந்த பறந்து  கிடக்கும் வையக வலை விரிவில் ஒரு கண்ணியாக இணைத்துக்கொள்ள தூண்டியது. வாய்ப்பு சமமானதாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். கல்வி கற்கும் வாய்ப்பு மட்டும் எல்லோருக்கும் கிடைத்திருந்தால் இந்தியாவில் இன்னும் முப்பத்தைந்து விழுக்காடு எழுதப்படிக்க தெரியாதவர் பட்டியலில் இருக்க நேரிடுமா என்ன? 


இரண்டு மூன்று பேர் இந்த உலகை புரட்டிபோடும் சிந்தனையை உருவாக்கி அளித்தவர்கள்  என நினைக்கிறேன். 'குரங்கிலிருந்து மனிதன் வந்தான்' என்ற மாபெரும் தத்துவம் சொன்ன சார்லஸ் டார்வின் தொழிலாளர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை அடிமை விலங்குகளைத்தவிர என்று உரக்கச்சொன்ன கார்ல் மார்க்ஸ்  


தியரி ஆப் ரிலேடிவிட்டி வரைவு செய்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 

எனது அனுபவங்கள் தொடரும் வரும் பதிவுகள் மூலமாக...