வலைப்பதிவில் தேட...

Monday, October 19, 2015

குற்றாலம் போயும் குளிக்க முடியவில்லை

ஆம் 17/10/2015 அன்று இரவு 9மணி அளவில் நான் நண்பர் ராதாகிருஷ்ணன், தங்கராஜ், முனியசாமி ஆகியோர் குற்றாலம் சென்றோம் குளிக்க...

குறைந்த அளவில் மட்டுமே ஐந்தருவியில் தண்ணீர் விழுந்தது. பெண்கள் பகுதியில் அதுவும் இல்லை.

இரவு உணவு முடித்து விட்டு பாண்டியன் ஹோட்டல் அறையில் தங்கினோம்.

நள்ளிரவில் மழை ஓசை. தட தடவனெ நண்பர்கள் எழுந்து அறையின் கதவுகளை அடைத்துவிட்டு மறு படியும் உறங்கினார்கள். நான் நல்ல தூக்கம்.

மறு நாள் விடிந்தவுடன்தான் தெரிகிறது.

பழைய குற்றாலம் சென்றோம் குளிக்க தடை விதித்திருந்தார்கள்
அதே கதிதான் மற்ற பாரம்பரிய ( பழைய, பிரதான மற்றும் ஐந்தறுவி) அருவிகளுக்கும். எந்த அருவியிலும் குளிக்க முடியாத படிக்கு வெள்ளம் வெள்ளம் வெள்ளம். வெள்ளத்தைப்புகைப்படம் வீடியோ மட்டும் எடுக்க முடிந்தது.



































வலைப்பதிவர் திருவிழா 2015 புதுக்கோட்டை

வலைப்பதிவர் திருவிழா பற்றி அநேகர் எழுதி இடுகை இட்டு முடித்திருக்கின்றனர். நானும் எனது பங்கிற்கு எனது மொபைலில் கிளிக்கிய சில புகைப்படங்கள் இதோ:




வலைப்பதிவர் அறிமுகம் நிகழ்வு காணொளி. சுருக்கமான எனது அறிமுகம். இந்த நீண்ட பதிவில் எனது இடம் 2.16.32 நிமிடம் தொடங்கி 2.18.10 வரை சுருக்கமாக இருக்கிறது. அதன் முகவரி:


https://www.youtube.com/watch?v=qNmGS8kniK4&feature=youtu.be&t=4885









Tuesday, October 6, 2015

மதுரை-தமிழ் தி இந்து வாசகர் திருவிழா- ஒரு பார்வை



கடந்த 04/10/2015 அன்று மதுரைக்கல்லூரியில் "தமிழ் தி இந்து" பத்திரிகை தனது இரண்டாவது ஆண்டு நிறைவை ஒட்டி வாசகர் திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.  சென்ற ஆண்டு கலந்து கொள்ள இயலாத காரணத்தால் இந்த ஆண்டு கலந்து கொள்வது என்று முடிவு செய்து அதன் படி மதுரைகல்லூரிக்கு சென்று அந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.இனி அது குறித்து வெள்ளந்தியாக சில கருத்துகள்...





தொண்ணூறுகளின் துவக்கத்தில் இருந்து ஒரு இருபதாண்டு காலமாக தினமணி வாசகராக இருந்து வந்திருந்தேன். அதற்கு முன்பாக தீக்கதிர் பத்திரிகை மட்டும் படித்து வந்திருந்தேன்.ஏப்ரல் 90 முதற்கொண்டு தீக்கதிரோடு தினமணியும் சேர்ந்து கொண்டது. தினமணி பத்திரிகையின் நடுப்பக்கங்களில் வரும் கட்டுரைகள் தலையங்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தது கூட தினமணி தொடர்ந்து வாங்க ஒரு காரணமாகவும் ஆகிப்போனது. கொஞ்ச நாட்கள் கழித்து தி இந்து ஆங்கில நாளிதழ் மற்றும் தினமணி மட்டும் வாங்கி வந்திருக்கிறேன். தீக்கதிர் சில காரணங்களால் வாங்க முடியாமற் போனது. அவ்வப்போதுஅதை நெட்டில்  படித்து விடுவது உண்டு.  தினமணி கட்டுரைகளுக்கான ஆசிரியர் கடிதம் மிகவும் பிடித்தமானது எனக்கு. அந்த வகையில்  நானும் அன்புள்ள ஆசிரியருக்கு என்ற பகுதிக்கு கடிதங்கள் எழுதினேன். 1999 முதல் ஒரு  ஐந்தாறு ஆண்டுகளில் எனது கடிதங்கள் பல பிரசுரம் ஆகியிருக்கிறது தினமணியில். எண்ணிக்கை அளவில் கொண்டால் ஒரு நூறு கடிதங்களைத்தாண்டும்.

குஜராத் மா நிலத்தில் பணி நிமித்தம் மாற்றலில் சென்ற நாட்களிலும்கூட ஒரு 3 மாத சந்தா கட்டி பத்திரிகை வரவழைத்து படித்தது உண்டு. அந்த தனிமை நாட்களில் பல கடிதங்கள் எழுதியிருக்கிறேன். மதவெறி கலவரங்களினூடே கூட எனது கடிதங்கள் தினமணியில்  பதிவாகி இருக்கின்றன.





பிரிதொரு கடிதம்:



அத்தோடு ஆங்கில தி இந்து பத்திரிகையும் வீட்டிற்கு வரவழைத்து படித்து வந்தேன் என்று சொன்னேன் அல்லவா? அப்படியாக வாங்கிக்கொண்டிருக்கையில் சரியாக  2013 செப் 16 முதல் தமிழ் தி இந்து நாளிதழ் தி இந்து ஆங்கிலப்பத்திரிகையுடன் சேர்த்து இலவசமாக  அறிமுகம் செய்தார்கள். ஒன்றிரண்டு நாட்கள் தமிழ் இந்து பத்திரிகையை அவர்கள் ஆங்கில இந்து பத்திரிகையுடன் சேர்த்து போட்டார்கள். தமிழ் இந்து பத்திரிகை ஆரம்பித்த அடுத்த நாள் தந்தை பெரியாரின் பிறந்த நாள். அது சம்பந்தமாக பிரமாதமான கட்டுரைகள் இல்லாவிட்டாலும் கூட அவரைப்பற்றி அதிகமாக எழுதாவிட்டாலும் சிறிய அளவில் கூட செய்தியாக வெளியிடவில்லை. நூறு ஆண்டு காலத்துக்கும் மேல் இதழியல் துறையில் திகழ்ந்து வரும் நாளிதழின் இந்த நிலைபாடு கொஞ்சம் சரியில்லை என்று அப்போது தோன்றியது.




தவிர, தமிழ் தி இந்து வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் பத்திரிகையாளர்களின் பெயர்களுடன் அவர்களது உழைப்பை கௌரவப்படுத்தும் விதமாக வெளி வந்தது என்னை மிகவும் ஈர்த்தது.மற்றுய்ம் வித்தியாசமான, புதிய களத்தில் தன்னுடைய பணியை ஒரு பத்திரிகைக்கே உரித்தான விதத்தில் கட்டுரைகள் மற்றும் நடுப்பக்கம் நன்றாக விஷயதானத்துடன் வெளி வந்தது  தமிழ் தி இந்து.

முதல் ஆண்டு மதுரையில் நடந்த வாசகர் திருவிழாவிற்கு நான் செல்ல முடியவில்லை காரணம் பெல்லாரியில் பணியில் இருந்தேன். எனது நண்பர் கிருஷ்ணகுமார் ராஜா முத்தையா மன்றம் சென்று கலந்து கொண்டுவிட்டு என்னிடம் தகவல் பரிமாறிக்கொண்டார்.

இந்தமுறை வாய்ப்பிருந்ததால் மதுரைக்கல்லூரி சென்று கலந்து கொண்டேன். நுழையும் போதே திரைக்கலைஞர் ரோகிணி பொதுவாகவும் திரைப்படம் சம்பந்தமாகவும் பேசினார். திப்பு சுல்தான் படத்தில்  நடிக்ககூடாது என்று சொல்லுபவர்கள் அரை குறை ஆடையுடன் சினிமாக்களில் பெண்களை இழிவு படுத்தி படம் எடுப்பதை தட்டிக்கேட்டு எதிர்க்கத்தயாரா? என்று ஆவேசத்துடன் பேசினார் திரைக்கலஞர் ரோகிணி. அதற்கான கைதட்டல் அதிக நேரம் நீடித்தது. மதச்சார்பின்மையை வலியுறுத்துவதாக அவரது பேச்சு வெளிப்பட்டது

இந்தப்பேச்சின் சாரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடிகர் ரோகிணி அவர்களின் சிந்தனையை ஒட்டிய பேச்சாக எனக்குப்பட்டது. ஆனால் நடப்பில் தமிழ் இந்து தன்னுடைய 05/10/2015 செய்தியாக இப்படிப்பிரசும் செய்திருந்தது. முதல் பகுதியான திப்புசுல்தான் பற்றி குறிப்பிடவில்லை. மறு பாதியை அரை குறை ஆடையுடன் சினிமாக்களில் பெண்களை இழிவு படுத்தி படம் எடுப்பதை தட்டிக்கேட்டு எதிர்க்கத்தயாரா? என்று மட்டும் செய்தி வெளியிட்டிருந்தார்கள். 
மிகப்பழம் பெரும் பத்திரிகையான் தி இந்து  இப்படியாக தனது சார்புத்தனத்தை நிஜத்தில் ராஜ் நாத் சிங் பாதையிலான "இந்து"வாகவே  என்பதாகவே எனக்குப்புரிந்தது. (ராஜ் நாத் சிங் தான் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கொல்லப்பட்ட அக்லாக் என்பவரின் மரணத்தை சாதாராணமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுவிட்டு அடுத்த நாளே இந்தியா மதச்சார்பின்மை குறித்து செயல்பட எந்தத்தயக்கமும் கொள்ளாது என்று சொல்லுகிறார்.)

பேராசிரியர் ஞான சம்பந்தன் பேசினார். அப்போது கேக்குதா என்றார். இப்புடித்தான் ஒரு கூட்டத்துல கேட்குதான்னு கேட்டேன். கேக்கல சும்மா பேசுங்கன்னு கடைசிலிருந்து ரெண்டு பேரு சொன்னாய்ங்க. இதைக்கேட்டு முன்னாடி வரிசையிலிருந்து நாலு பேரு எந்திரிச்சி போய்ட்டாய்ங்க. நீங்க எதை வேணா பேசுங்க எங்களுக்கு எந்தக்கவலையும் இல்லைனு அவிங்க இருக்கானுங்க...

மேடைக்கலைவாணர் நன்மாறன். நான் எவ்வளவு நேரம் பேசலாம்ணு பேராசிரியர்ட்ட கேட்டேன். 15 நிமிடம் என்றார். அடேங்கப்பா சட்ட சபையில எங்களுக்கு கொடுத்த நேரத்தைக்காட்டிலும் மூன்று மடங்கு என்றார். அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து நீங்க அரை மணி  நேரம் பேசலாம் என்று சொன்னவுடன் அது சரிதான் எங்களுக்கு சட்ட சபையை விடவும் 6 மடங்கு நேரம் ஒதுக்கினீர்கள் என்றார். கல்யாணம் பேசி முடிக்கும்போது யாராவது மாப்பிள்ளைக்கு எத்தனை பவுன் போடுறீங்க? என்று யாரும் ஏன் கேட்பதில்லை. பெண்களுக்கு மட்டும் எத்தனை பவுன் என்று கேட்கிறார்களே? இராமாயணத்தில் ராமன் வில்லை ஒடித்து தான் மணம் முடித்தான். மகாபாரதத்தில் அர்ஜுனன் பாஞ்சாலியை அம்பு எய்தி இலக்கை வென்றுதான் முடித்தான். வரதட்சணை ஒழியட்டும் என்றார்.

அவர்களே இவர்களே என்றெல்லாம் யாரையும் விளிக்காமல் டாஸ்மாக்கை மட்டுமே குறிவைத்துப்பேசிய சட்டக்கல்லூரி மாணவி  நந்தினி குடியின் தீமை குறித்து பேசினார். அரசியலமைப்பு சட்டம் 328 இன் படி ஒருவரை போதைக்கு ஆளாக்குவது சட்டப்படியான குற்றம். அப்படியான குற்றத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மா நில அரசே செய்கிறது. குடியினால் குடும்பங்கள் அழிகின்றன. ஆண்மை அற்றுப்போகின்றனர் என்று பேசினார். (டாஸ் மாக்கை எதிர்த்த போராட்டத்தில் 41 முறை சிறை சென்றவர் இவர்)

அரபு நாடுகளுக்கு டிரைவர் வேலைக்கு சென்று ஒட்டகம் மேய்த்த சதாம் உசேன் என்பவரை அறிமுகம் செய்தனர். வாட்ஸ் அப் மூலம் தமிழ் இந்து அவரை தாய் நாட்டுக்கு அழைத்து வர உதவி செய்தது. 

வத்தலக்குண்டு பஸ் நிலையைத்தையே சுத்தமாக மாற்றிக்காட்டிய மன நலம் குன்றிய ரங்கராஜன் என்பவரை அவரை இப்போது பராமரிக்கும் திருச்சி தில்லை நகர் அமைப்பின் சார்பாக பேசினார்.

மேதகு அப்துல் கலாமின் பேரன் கலந்து கொண்டார். ( இவர் சமீபத்தில் அமீத் ஷா முன்னிலையில் பா ஜ க வில் சேர்ந்தவரா எனத்தெரியவில்லை) சோலார் ராமேஸ்வரம் பற்றி குறிப்பிட்டார்.

குள.சண்முகசுந்தரத்தின் உசிலம்பட்டி இன்று (பெண் சிசுக்கொலையில்தான்) பகிரப்பட்டது. களப்பணியாளர் குறிப்பிடுகிறார்: முதல் குழந்தை  நிச்சயமாக ஆண் குழந்தைதான் வேண்டும். இல்லையென்றால் பரவாயில்லை. இரண்டாவது ஆணாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கருவில் ஆய்வு செய்து பெண்ணாக இருந்தால் கருக்கொலை செய்வது ( முன்னாட்களில் பெண்  குழந்தை பிறந்த பிறகு எருக்கம்பால் அல்லது நெல்லு மணி போட்டு சாகடித்தார்கள்)  அந்த மண்ணில் பிறந்து சாகடிக்கப்படாத ஒரு வாசகர் மேடையில் பேசினார். முக்கிய காரணம் பெண் குழந்தைகளை பிளஸ் டூ அல்லது 10 தேறியவுடன் மணம் முடித்து வைத்து விடுகிறார்கள். முடிவெடுக்க முடியாத சிறிய வயதினரால் சிசுக்கொலை/ கருக்கொலைக்கு காரணமாக இருக்கலாம். என்று புதிய தளத்தை தொட்டார். பால்ய விவாகம் முடிவுக்கு வரவேண்டும் என்பதுதான் இவரது கருத்தின் முத்தாய்ப்பாகப்புரிந்து கொண்டேன்...


Thursday, September 24, 2015

தென்னிந்தியாவின் முதல் சமதர்மவாதி

"சிந்தனைச்சிற்பி சிங்காரவேலு வாழ்வு சிந்தனையும்"

                                                                             - கே. முருகேசன்/சி எஸ் சுப்பிரமணியம்
                                                                               வெளியீடு பாரதி புத்தகாலயம்
                                                                               பக்கங்கள்:432
                                                                               விலை ரூ 200/-

பிறப்பு:  18, பிப், 1860  மறைவு: 11 பிப், 1946

புத்தர் அவர்களின் 2443 ஆவது  இறந்த நாள் நினைவுக்கூட்டம் ஒன்று சிங்காரவேலர் வீட்டில் (22, கடற்கரை வீதி, திருவல்லிக்கேணி, சென்னை) 1899 ஆம் ஆண்டு நடைபெற்றது.

1921இல் ஒத்துழையாமை இயக்கத்தில் முன்னின்று போராடியவர்.

அந்த சமயத்தில் மகாத்மா காந்திக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதியவர். அவரது சனாதன ஆதரவு மற்றும் தீண்டாமை ஒழிப்பு கொள்கைகளைச்சாடியவர். எட்டு கோடி தீண்டாத ஜாதியினரை கோவிலுக்குள் நுழைவித்தால் போதும் என்று நினைக்கும் காந்தி அவர்களது வாழ்வின் ஏழ்மை நிலை, கஷ்டங்களினின்றும் மீட்க ஏதும் செய்வதற்கு தயாரனவராக காந்தி இல்லை என்பதை தெளிவாக விண்டுரைத்தவர்.

பாரதியாரின் நண்பர். அவரது இறுதி நாட்களில் திருவல்லிக்கேணியில் உடன் இருந்தவர்.

1923 இல் முதன் முதலாக சென்னையில் மே தினம் கொண்டாடிய மாபெரும் மனிதன்.

1930 இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தடம் பதித்தவர்
சென்னையில் பல  தொழிற்சங்க இயக்கங்களுக்கு தலைமேற்றவர். பி அண்ட் சி மில், ரயில்வே, டிராம் ஊழியர்களின் வெற்றி கரமானவேலை நிற்த்தப் போராட்டங்களின் தலைவர்.

திரு வி சக்கரை செட்டியார் திரு வி கலியாண சுந்தரனார் ஆகியோருடன் தோழமை கொண்டவர்.

1931 விருது நகர் மா நாட்டில் நாடார்கள் சமையல் நடக்கும் என்று அறிவித்தார் பெரியார் அப்போது வரை பிராமணர்கள்தான் கூட்டங்களுக்கு சமைத்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அந்த மா நாட்டில் தான் கைம்பெண்களுக்கு மறு விவாகம் நடைபெற்றது. அந்த மா நாட்டில் பங்கேற்க சிங்கார வேலர் உடல் நிலை அனுமதியாத போதும் அருமையான வாழ்த்து அனுப்பியவர்.அந்த வாழ்த்தில் இருந்து...
"தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டு பூனூலையும் சந்தியா வந்தனத்தையும் வைத்துக்கொண்டிருத்தல் வஞ்சனை அல்லாது வேறில்லை.தீண்டாமையை விட்டவர்கள், ஏன் ஆச்சாரியார்கள் எனவும், ஐயர், ஐயங்கார்கள் எனவும் அழைக்க சம்மதிக்க வேண்டும்!".

தந்தை பெரியாருடன் சுய மரியாதை இயக்கங்களில் சேர்ந்து பணியாற்றிவர்
மீரட் சதி வழக்கிலிருந்து மீண்டு வந்து குடியரசு பத்திரிகைக்கு "கம்யூனிசமும் மதமும்" என்ற தலைப்பில் 1930 களில் தொடர் கட்டுரைகள் வரைந்தவர்.


1946 இல் சாகும் தருவாயில் வெளி நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட  10000 க்கும் மேற்பட்ட புத்தங்களை பொதுவுடைமைக்கட்சிக்கு கொடுத்து சென்றவர்.

இனி அவரது எழுத்துகளிலிருந்து:

காங்கிரஸ் திட்டத்திலும் சொத்துரிமையும் மதவுரிமையும் ஜாதியுரிமையும் காக்கப்படப்போகின்றது. நிலச்சுவானும் பண்னை ஆளும் காங்கிரஸ் திட்டத்தில் இருந்தே தீரப்போகின்றனர். தொழிலாளரும் முதலாளியும் பங்காளி தத்துவ முறையைக்கொண்டாடப்போகின்றனர். இவ்வெருவருக்கும் எலிக்கும் பூனைக்கும் உள்ள சம்பந்தந்தான் ஏற்படப்போகின்றது. குடிக்கூலி வாங்கும் வீடடைந்தவனும் குடக்கூலி கொடுக்கும் குடியானவனும் இருக்கப்போகின்றனர். வர்த்தகமும் சிலரிடத்தே தங்கப்போகின்றன. பொதுவுடைமையோ சமதர்மவுடைமையோ, காங்கிரஸ் ஆட்சியில் காணப்போவதில்லை.

நாட்டுக்கு நல்லரசன் வந்தாலும், தோட்டிக்குப்புல் சுமக்கும் வேலை இருந்தே தீரப்போகிறது.

நிலம் இல்லாதவன் நிலம் இல்லாமலும், ஜமீன் தாரன்  ஜமீன் தாரனாகவும், முதலாளி முதலாளியாகவும் , தொழிலாளி தொழிலாளியாகவும், புரோகிதன் புரோகிதனாகவும், கோயில் கோயிலாகவும், பிராமணன் பிராமணனாகவும், பறையன் பறையனாகவும் இருந்தே தீரப்போகின்றனர்.
இந்தத்திட்டமே நமக்குள்ள சமூகத்திட்டமாக 5000 வருஷங்களாக இருந்து வருகின்றது.
இனி வரப்போகும் சைமன் திட்டத்திலும் சொத்துரிமை, மதப்பற்றுரிம, ஜாதி வித்தியாச உரிமைக்காப்பை அளித்துள்ளனர். இக்காப்பினை காங்கிரஸ் நிராகரித்ததாகத்தெரியவில்லை.

நமது மூன்றாம் வட்ட மேசை, ஜாதியை ஆசீர்வதித்து விட்டது!. அவனவன் ஜாதி அவனவனது  ஜாதி வித்தியாசங்களை அவனவனுக்கே விட்டுவிட வேண்டும். வருண பேதத்தை சட்ட முறையால் நீக்க முடியாது. எங்களுக்கு, வெள்ளையர்களுக்கு ஜாதி வேற்றுமை இல்லாமல் இருப்பினும், ஜாதி வேற்றுமையை ஆதரிபவர்களைத் தொடப்படாது.

 நான்கு வகை ஜாதியானாலும் சரி, 4418 ஜாதியானாலும் சரி. இவைகள் ஆட்சேபணை இன்றி யாவரும் அனுஷ்டிக்கலாம் என்ற கருத்தைக்கொண்டுள்ளது வட்ட மேசை!.

பார்ப்பான் பார்ப்பானாக இருத்தல் வேண்டும்!. பறையன் பறையனாகவே இருத்தல் வேண்டும்!!. ஒன்றிலொன்று நுழையக்கூடாது!!

புத்தர் காலம் முதல் ஜாதி கண்டிக்கப்பட்டும், கலப்புத்திருமணங்கள் நடந்தும், ஜாதி ஒழிந்தபாடில்லை.

நமது இந்திய நாட்டு மக்களில் 7, 8 கோடி மக்கள் (இந்தியாவின் மக்கள் தொகை 1932 இல் 34 கோடிகள்) தீண்டாத வர்களென்றும், தாழ்த்தப்பட்டவர்களென்றும்,பஞ்சமர்களென்றும், பறையர்களென்றும் வழங்கி வருகின்றார்கள். ஒடுக்கப்பட்டவர்களென்ற பிரத்தியேக ஜாதியார் நம்முடைய ஊரைத்தவிர மற்றெங்கும் இல்லை.

ஆஸ்திகம் ஒழிந்து நாஸ்திகம் பரவ வேண்டும்

ஆனாலும் சரி, அல்லது தேசத்து வறுமை நீங்க வேண்டும். ஆனாலும் சரி, இனி வரும் அரசியல்கள் சமதர்ம ஒழுங்கின்படி அமைய வேண்டும்.

நமது நாட்டிலுள்ள சாமான்ய மக்கள் உண்மை சுதந்திரம் பெற்று, பசி இல்லாமலும், மத கற்பனை இல்லாமலும், ஜாதி சமயம் இல்லாமலும், உண்ண, உடுக்க, இருக்க, பிடிக்க, வசதிகள் யாவருக்கும்  சரி நிகர் சமான வாழ்வைப்பெற, சமதர்ம ராஜ்ஜியத்தை ஸ்தாபியுங்கள். 

சமதர்மமென்றால் என்ன? நாட்டில் விளையும் விளை பொருளும், செய்யப்படும் செய்பொருளும், அந்நாட்டிலுள்ளயாவருக்கும் சரி சமத்துவமாகவே வினியோகமாகும் சமூகம் எதுவோ, அதுதான் சமதர்ம சமூகமெனப்படும் என்பதறிக.

உழைப்பவனுக்கு உரியது உழைபின் பயன் என்பதுதான் சமதர்மத்தின் தருமம். சமதர்ம சமூகத்தில்தான் செய்த வேலையின் முழுப்பயன் தனக்கே கிடைக்குமாதலால், ஆசையுடனும் அவாவுடனும் அவனனுக்கிட்ட வேலையைச்செய்வான்.

சுதந்திரம் அடையும் முன் அவர் காலமாகிப்போய்விட்டார். அவரது கருத்துகள் இன்னும் உயிருடன் இருக்கின்றன. சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன பிறகும் நிலைமையில் இன்னும் மாற்றங்கள் வேண்டி நிற்கிறது.

கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகள் கழிந்த நிலையிலும் கூட அவரது கருத்துகள் போதனைகள் இன்றைய இந்தியாவுக்கு தேவைப்படுகிறது, மத எதிர்ப்பு மூட நம்பிக்கை எதிர்ப்பு, காங்கிரஸ் கொள்கை எதிர்ப்பு, காந்தியாரின் தீண்டாமை ஒழிப்பு  எதிர்ப்பு,பொதுவுடைமையின் தேவை இன்றைக்கும் இந்தியாவுக்கு அவசியப்படுகிறது.

Tuesday, September 15, 2015

நான் சொல்வனவும் செய்வனவும் சரித்திரத்தைச் சேர்ந்தவை-ஹிட்லர்...



 


சென்னை வந்த பிறகு ஒரு  நண்பர் ஒருவர் ஹிட்லர் பற்றிய ஒரு புத்தகம் வேண்டும் வாங்கித்தர முடியுமா என்று கேட்டிருந்தார். சரி என்று சொல்லியிருந்தேன். மதுரைபுத்தகத்திருவிழா ஒரு வாய்ப்பென்று கருதி அங்கே சென்றேன். மதுரை புத்தகச்சந்தைக்கு சென்றதே மெனக்கெட்டு ஹிட்லர் பற்றிய ஏதேனும் ஒரு புத்தகம் வாங்குவதற்குதான். முன்னேற்றப்பதிப்பகம் சார்பில் " ஹிட்லர் சர்வாதிகாரியானது எப்படி" என்ற தலைப்பில் விலை ரூ 225/- க்கு பார்த்தவுடன் வாங்கி விட்டேன். அப்புறமாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பெற்ற புத்தகக்கடைக்குச் சென்றேன் அங்கேயும் ஒரு ஹிட்லர் புத்தகம் பார்த்தேன். விலை ரூ 150/- அதையும் வாங்கி விட்டேன்.

ஒருபுத்தகத்தை அந்த நண்பருக்கு பரிசளிக்க நாம் படிக்க ஒன்று என வாங்கி விட்டேன்.  டி என் ஜா எழுதிய பசுவின் புனிதம், பாவ்லோ பிரய்ரே எழுதிய ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி முறை  மாசேதுங் எழுதிய ரெட்புக் சாகித்திய அகாடமி வெளியீட்டில் கன்னட சிறுகதைகள்  உள்ளிட்ட சில புத்தகங்கள் சுமார்  ஒரு ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியாகி விட்டது.

விருதுநகர் செல்ல பஸ் ஏறிய பிறகு ஹிட்லர் தலைப்பிலான இரு புத்தகங்களையும் புரட்டிப்பார்த்தால் ஒரே ஆச்சரியம். திரு சாமி நாத சர்மா என்பவர் எழுதிஉள்ள  ஒரே புத்தகம்தான். வெளியீட்டாளர் மட்டும்தான் வேறு. அதே உள்ளடக்கம். ஆனால் முன்னேற்றப்பதிப்பகம் ரூ 225/-க்கும் உலகத் தமிழ் வளர்ச்சித்துறை ரூ 150/- க்கும் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க பதிப்பகங்கள்.

இனி ஹிட்லர் புத்தகத்திலிருந்து:

2014 ஆண்டு வெளியிடப்பட்ட முதற்பதிப்பிற்கான முன்னுரையில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு வாழ்த்தும்  பாராட்டு ஒருங்கே இருக்கிறது.
புத்தகத்தின் கடைசியில்  வாழ்க ஹிட்லர் என்று சாமி நாத சர்மா முடித்திருந்தார்.
புத்தகத்திலிருந்து:

"அந்நிய  நாட்டிலே ஒரு அரசனாக இருப்பதைக்கட்டிலும் தனது தாய் நாட்டிலே ஒரு தோட்டியாக இருப்பதையே கௌரவமாகக்கொள்ள வேண்டும்".

ஆசிரியரின் மொழியில்:

அன்பு,  நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை
ஐந்தும் ஹிடல்ரிடம் உண்டு.
முகத்தில் எப்பொழுதும் புன்சிரிப்பு
யாருடனும் பணிவாகப்பேசுதல்
சர்வாதிகாரி என்று காட்டிக்கொள்வதில்லை
ஒழுக்கம் நிறைந்தவன்
சிகரெட், மதுபானம் உபயோகிப்பதில்லை
மாமிசம் கையால் தொடுவது கூட இல்லை
மரக்கறிதான் உணவு. அதுவும் மிகவும் சாதாரணமானது.
ரொட்டி, பால், பழம், பருப்பு தினுசுகளில் ஏதேனும் ஒன்று
தனியாக சாப்பிடமாட்டான்
இரண்டொரு நபர்களை விருந்தினராக வைத்துக்கொண்டு சாப்பிடுவான்
சாப்பிடும் போது உரக்கச் சிரிப்பான்
உற்சாகத்துடன் பேசுவான்
மேஜையைத்தட்டுவான்
தன்னை மறந்து எழுந்து நிற்பான்
பிறர் நகைப்புடன் பேசினால் அதனை பூராவும் அனுபவிப்பான்
எல்லோருடனும் சமமாகப்பழகுவான்
பெண்களிடத்தில் மிக அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வான்
சங்கீதம், ஓவியம், நாடகம்  தன்னை முழுவதும் ஒப்புக்கொடுத்துவிடுவான்
பாடிய கலைஞரை கௌரவிப்பான்
மன அமைத்தீகு சங்கீதத்தை நாடுவான்
ஓவியம் வரைவான்
குழந்தைகளிடம் அன்பு போற்றுவான்
வேடிக்கை செய்வான்
ஓடி விளையாடுவான்
பொதுப்பணத்தைக்கையாடும் விஷயத்தில் மிகவும் கண்டிப்பாகவும் சிக்கனமாகவும் இருப்பான்
யாரையும் எழுத்து நின்று வரவேற்பான்
வழியனுப்ப சிறிது தூரம் உடன் செல்வான்
வந்தனம் கூறுவான்

உடை பாவனை ஆகி இரண்டையும் பார்த்தால் சாதாரண ஒரு கீழ்த்தர உத்தியாகஸ்தனுக்கும் இவனுக்கும் எவ்வித வேற்றுமையும் காணப்பட மாட்டாது.

மற்றெல்லா வகையிலும் போலவே உடையிலும் இவன் ஆடம்பரமில்லாதவனே.
நாய்களிடம் பிரியாம இருப்பான். மக், உல்ஃப், பிளான்டா பெயருள்ள 3 நாய்களை இவன் அனேகமாகக் கூடவே வைத்திருப்பான். அவைகளுடன் குதித்து விளையாடுவான்.
"வாகென்  ஸல்ட" ஹிட்லரின் சொந்த வீடு. ஓய்வெடுக்க அங்கே செல்வான்
மூன்று மணி நேர ரயில் பயணம் செய்து அங்கே செல்வான்
மலையடிவாரமும், ஏரிக்கரையும் சந்திக்கும் ஒரு அழகிய இடம் அவனது ஓய்விடம்.

ஒரு நாளில் 18 மணி நேரம் உழைப்பான்

கூர்ந்து கவனித்தல், ஆழ்ந்து படித்தல், குறிப்பெடுத்தல் அவனது வழக்கம்.
முசோலினியைப்போல் பெரிய படிப்பாளி  இல்லை ஆனால் அனுபவ ஞானம் நிறைய இவனுக்கு இருப்பதைப்போல் வேறொருவருக்க்கும் இல்லையென்று சொல்லப்படுகிறது.
யூதர்களும் மார்க்சீயமும் இவனுடைய முதல் எதிரிகள்.
அவனுடைய கட்சி ஜெர்மானிய தொழிலாளர் கட்சி.
அந்தக்கட்சியில் ஏழாவது உறுப்பினனாக தன்னை பதிவு செய்து கொண்டான்
கூட்டங்கள் மியூனிக்  நகரில் பீர் ஹாலில் நடக்கும்.
எட்டு மணி வேலை நேரக்கொள்கைய ஒத்துக்கொண்டவன்.
ஜெர்மானியர்களே உயர்ந்தவர்கள் என்ற கொள்கை கொண்டவன்.
அவன் சான்சலராக ஆனவரை மட்டுமே இந்தப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது (1930கள் வரை )

சொல்ல வந்தது:

ஒருபத்து லட்ச ரூபாய்க்கு ஒபாமா முன்னால் தனது பெயரை தங்கத்தால் பொறித்துக்கொண்ட கோட்டைப்போட்டுக்கொண்ட  ஒரு ஜனநாயகப்பிரதமர் கூட ஹிட்லரின் வார்த்தைகளால் தன்னை நிலை நிறுத்தப்பார்க்கிறார். அதாவது இன்றைய பிரதமர் சொல்லுகிறார் நான் ஏழைகளைப்போலவே சாதாரண உடைகள் அணிகிறேன். சொல் ஒன்று செயல் ஒன்று என்பதாக இருக்கிறது இவரின் பேச்சு...

நான் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கிறேன் என்று நமது முதல்வர் கூட  சில ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். 2011 இல் ஆட்சிக்கு வந்த போது ஒரு பத்திரிகையாளர் கூட்டம் நடந்தது. அதில்  நான் வாரா வாரம் பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என்று சொல்லி விட்டு  நான்கரை ஆண்டுகளாகியும் கூட அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காதது. இதுவும் கூட சொல் ஒன்று செயல் ஒன்று என்பதாகவே தெரிகிறது.  கூடவே அவர் 18 மணி நேரம் உழைக்கிறேன் நாட்டு மக்களுக்காக என்று சொன்னதும்.


Monday, September 14, 2015

ஒரு சவரக்காரனின் மீசை மயிருகள்


"ஒரு சவரக்காரனின் மீசை மயிருகள்"

பாண்டிச்சேரி நாட்களில் மிகவும் மறக்க முடியாத இலக்கிய அனுபவமாக அமைந்தது ஒரு கவிதைக்காரனின் மீசை மயிருகள் நூல் அ றிமுகக்கூட்டம்தான்.

அதற்கு முன் இந்த இலக்கியக்கூட்டத்தில் நான் பங்கேற்பதற்கான சூழல் இங்கே... பாண்டியில்  நான் பணியில் சேர்ந்த சில  நாட்களில் த மு எ க ச திரைப்பட ஒருங்கிணைப்பாளர் தோழர் எஸ் கருணா அவர்களின் தேர்வில் பாண்டிச்சேரி பல்கலைக்கழக விசுவல் கம்யூனிகேசன் துறையுடன் இணைந்து ஒரு சர்வ தேச திரைப்பட விழா ஏற்பாடு ஆகி இருந்தது. வருடா வருடம் ஜனவரி மாதத்தில் நடக்கும் நிகழ்வு இது.  அவருடன் சேர்ந்து ஒரு மூன்று நாட்கள் வியட்நாம் ஓடிஸா கன்னட திரைப்படங்களைப்பார்த்திருந்த நாட்களில் தோழர் இராம கார்த்திகேயன் அவர்கள் கருணா மூலம்  அறிமுகம் ஆனார்.


சிறுகதை, நாவல், கவிதை இலக்கியம், இடது சாரி, அரசியல். தலித்தியம், மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ,பெண்ணியம், விடுதலைசிறுத்தைகள் கட்சி, பா ம க, திராவிட அரசியல் என்று எல்லா வகையிலும் எனது எண்ண ஓட்டத்தை   ஒத்திருந்தார். அவர்  தோழர் தண்டபாணி அவர்களை அறிமுகம் செய்வித்தார். இருவரும் திருச்சிற்றம்பலம் ஊரைச்சேர்ந்த நல்ல சிந்தையான நண்பர்கள். தோழர் தண்டபாணி தமிழ்நாடு மருத்துவர்  சமூக நல பாதுகாப்பு சங்கத்தின் தலைவர். 

சென்னை புத்தகத்திருவிழாவில் வாங்கிய  ஆதவன் தீட்சண்யாவின் "மீசை என்பது வெறும் மயிர்" புத்தகத்தை அபோதுதான் படித்தது முடித்திருந்தேன். அப்படி ஆன பொழுதுகளில் ஒரு நாள்  இ எம் எஸ் கலைவாணனின்  "ஒரு சவரக்காரனின் மீசை மயிருகள்" புத்தகத்தை தோழர் இராம கார்த்திகேயன்  அவரது கையொப்பம் இட்டு என்னிடம் கொடுத்தார்(கீற்று வெளியீட்டகம் விலை ரூ 75/- 92 பக்கங்கள்). படித்துப்பாருங்கள் தோழர் தண்டபாணியுடன் ஒரு நாள் உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சொல்லிப்போனார். 

செரக்கப்போகவேண்டியதுதானல

ஒரு மயிரும் புடுங்க முடியாது

நீ வழிச்சது போதும்

இவன் பெரிய மயிராண்டி

மயிரப்பிடுங்குன கதை

அந்த மயிரெல்லாம் எனக்கு தெரியும்

எவண்டா அவன் பெரிய மயிரா ?

 என்ற அன்றாடம்  கேட்டு கேட்டு சமூக அவலங்களின் ஓலமாக அல்லாமல் அன்றாட நிகழ்வான ஏற்றுக்கொண்ட மன நிலையை சாட்டையால் அடிக்கும் விதமான பட்டுத்தெறிக்கும் கவிதைகள் அத்தனையும். அங்கச்சவரம் செய்யச்சொன்ன ஒருவனை ஆண் குறி அறுத்து வாங்கடா  எவன் எவனுக்கெல்லாம் அங்கச்சவரம் செய்யணும் வாங்கடா என்று இலங்கையில் கந்தசாமிப்பிள்ளை ஒரு அலப்பறையைக்கொடுத்ததில் ( ஆதவனின் "மீசை என்பது வெறும் மயிர்"  புத்தகத்தில் வருபவர் கந்தசாமி பிள்ளை ) இருந்து மீளும் முன் இச்சமூகத்தின்  அவலத்தை மிகச்சிறிய புத்தகத்தின் மூலமாக எந்த அளவுக்கு எட்டி அறைய முடியுமோ அத்தனை சக்தியான வடிவான வரிகள். ஒரு வார்த்தை கூட அதிகமாகப்பிரயோகிக்காமல்.

ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்  நூல் அறிமுகக்கூட்டதில் கலந்து கொள்ளவேண்டும் நீங்கள் வரவேண்டும் என்று தண்டபாணியும் இராம கார்த்திகேயனும் வேண்டுகோள் விட்டனர். அதன்படி  நோட்டீசில் எனது பெயர் போட்டு விடுகிறோம் என்று சொன்னதோடல்லாமல், 31/03/2015 அன்று விழுப்புரம் நகரில் கூட்டம் நடை பெறும் என்று முடிவானது. ஒரு நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்டது இதுவே முதன் முறை.

வண்ணார்கள் பற்றிய  ஆய்வு நிகழ்த்திய முனைவர் கோ. ரகுபதி, எழுத்தாளர் நண்பர் போப்பு மற்றும் தலித் சுப்பையா இவர்களோடு நானும்.கவிதை எழுதிய இ எம் எஸ் கலைவாணனும் கலந்து கொண்டு ஏற்புரை யாற்றினார். அவர் எனக்கொரு சால்வை போர்த்தினார். நான் ஒரு கைத்தறித்துண்டை அவருக்கு போர்த்தினேன்.

வடிவேலு திரைப்படங்களில் அட சண்டாளா என்று குறிப்பிடுவதைக் கண்டனம் செய்தும், ஒரு இறப்பு வீட்டில் மூன்று சேவை சாதிகள் (வண்ணார், வெட்டியான், மருத்துவர் )சங்கமிக்கிறார்கள் என்றும். இந்த இழி தொழிலை விட்டு வெளியே வர வேண்டும் என்று அம்பேத்கரின் நினைவுகளோடு நான் பேசி முடித்தேன் . மருத்துவர் சங்கத்தில் முடிவாக சினிமாவில் மயிர் சம்பந்தமாக ஏதேனும் வசனங்கள் வெளியாவதை கண்டித்து முறையாக புகார் செய்வதென்று முடிவு செய்யப்பட்டது.

இனி அவரது கவிதை (என்னோடு சம்பந்தப்பட்டதாக நான் உணர்ந்தது):

தொட்டிலில் கிடக்கும் என்னை
சலூனில்
வேலை முடிந்து வந்த அப்பா
முதமிட்ட
கன்னப்பரப்பில்
இரண்டு மூன்று
வெள்லை முடிகள்
ஒட்டியிருக்கின்றன

எந்த ஜாதிக்காரனின்
அழுக்கு மயிரோ.

அப்பா சாப்பிட வரும்போது கைகளில் யார் யாருடைய  செருப்புக்குத்தடவிய பசையின் எச்சங்கள் முண்டு முண்டாக இருக்கும் பிய்த்துப்போடுவார்.  சில நேரம் கைகளிலேயே இருக்கும். அத்துடன் தான் அவரது சாப்பாடு...

இ எம் எஸ் கலைவாணன் நாகர்கோவில்காரர்.  விருது நகரில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வேதனை நம்மையும் வதைக்கிறது...

பிச்சையெடுத்தாலும்
பார்பர் ஷாப் வேலைக்கு
போக கூடாதுன்னு
சொல்லிட்டா அம்மா
லாரில  கிளியா இருக்கும்போது
விருது நகர் பஸ்ஸ்டாண்டு
குளி ரூம்ல
நான் குளிச்ச பொறவு
நீ குளில நாசுவத்தாயளின்னுட்டு
சோப்பு நுரையோடு
என்னை வெளியே  வர சொல்லி
டிரைவர் குளிக்க போனான்
பல்லு தேச்சுட்டு நின்ன
கண்ட பயக்க எல்லாம்
ஒரு மாதிரியா பாக்கானுக

ஒரு பத்திரிகையாளரின் அகால மரணம்


தோழர் சு பொ  அகத்தியலிங்கம் அவர்களுக்கு எனது நன்றிகள். ஒரு தலித் பத்திரிகையாளரின் நிலைமை குறித்த இந்த கட்டுரையை எனது வலைத்தளத்தில் வெளியிடுகிறேன். நாகராஜூ கொப்புளா என்ற எழுத்தாளரின் மரணம் குறித்த ஒரு படைப்பு இது. 35 வயது கூட நிரம்பாத  அந்த பத்திரிகையாளர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட விதம் குறித்தும் கட்டுரை பேசுகிறது.  





‘A largely Upper-caste Media is Not Good for India’s Democracy’ 
BY KEDAR NAGARAJAN ON 09/09/2015 


Nagaraju Koppula, who passed away in April this year after battling lung cancer, was the first Madiga dalit journalist to have made a mark in the mainstream English media. With his passing, the already miniscule number of dalit journalists in the media just got even smaller. 

According to the Media Studies Group and members of the Justice for Dalit Journalist Nagaraju Koppula Campaign which organised a memorial meeting here last week, 71% of media jobs in India are held by upper caste males who make up just 8% of the country’s population and there is not even a single adivasi or dalit journalist among some 300 identified ‘decision-makers’ in the media. In 2013, senior Journalist Ajaz Ashraf was able to find only 20 journalists who were dalit and willing to talk about their experiences. No wonder that adivasi, dalit and minority issues don’t get the coverage they deserve, or get portrayed in the way they do. 

Koppula’s story 

A reporter for The New Indian Express, Koppula covered a wide variety of issues and was known to be a diligent reporter. But despite his will to succeed, he was still a victim of what many are calling blatant casteism and discrimination. His pay scale was not the same as other upper caste journalists despite his frequent contributions to front page news, he received close to no financial support or adequate sick leave when he was battling the disease, and he was removed from the rolls of his organisation without appropriate notice. The contract system that journalists work under gives them little or no security. 

After Koppula’s death, the Telangana Union for Working Journalists staged protests outside the office of The New Indian Express demanding adequate compensation for his family, as well as a housing plot as part of the Journalists Housing scheme. Protests have also been staged against the hospital that allegedly incorrectly diagnosed him with TB and subsequently charged him for four months of treatment. They also called for the intervention of the National Human Rights Commission and the Supreme Court, but so far, nothing has happened.

While remembering Nagaraju and his contributions to the field of journalism, panelists at the memorial event delved deeper into the multiple barriers that socially disadvantaged groups face in the mainstream media. A senior journalist reminisced about teaching Nagaraju: “I sought his help for translation from Telugu for a documentary I was working on. I had often encouraged him to pursue a career in the regional media, but he was determined to succeed in English. His achievement is phenomenal, almost all the odds were stacked against him, but that didn’t deter him.” 

Blanking out of dalit voices 

Because of the lack of any dalit perspectives in the mainstream media, atrocities against them are either reported cursorily or completely ignored. This is evident right from the caste-based violence in Kilvenmani in Tamil Nadu in 1968, up to recent incidents in Bhagana in 2014. There is no coverage of the families of four Dalit girls from Bhagana who are still protesting at Jantar Mantar. 

Several commentators at the memorial meet, like Paranjoy Guha Thakurta pointed out that while social media and online news was important, especially when initiated by marginal communities, the traditional media also had to change. Others like Doordarshan journalist Satyendra Murli spoke about double standards in the media: when dalit journalists talked about caste they are accused of being casteist, but the silent discrimination or neglect by upper caste journalists is not perceived in the same terms. 

The Media Studies Group concluded the memorial meeting by presenting a charter of demands, which included appeals to the state, to media houses, to the employers of Nagaraju Koppula, and to civil society organisations on the need to create awareness on this issue. 

Appeals to the State include: 

The implementation of a reservation policy for media houses and channels of the Indian Parliament i.e. Doordarshan, Rajya Sabha TV and Lok Sabha TV, Prasar Bharati etc. 
Affirmative action policies at private media houses; the setting up on an institutional mechanism for complaints of discrimination 
An elimination of the contract system to ensure permanent employment. 
Implementation of the Supreme Court judgment of February 07, 2014 on implementation of the recommendations of the Majithia Wage Board, 2011. 
The same demands were also addressed to private media houses, but with the additional recommendation that they step up recruitment of journalists from marginalised communities, give them fellowships, and ensure parity in pay and other service conditions. The organisers also announced an award for dalit and adivasi journalists in the name of Nagaraju Koppula.